Tuesday 4 May 2021

S.M. வெங்கடேஷ் - மிஸ்டர் மனித நேயம்



காற்றோ மழையோ, இரவோ பகலோ சென்னையில் எங்காவது சாலையில் கேட்பாரற்று, சுயநினைவில்லாமல், பசியோடோ, பட்டினியாகவோ, நோய்வாய்பட்டு யாராவது இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளலாம் திரு. வெங்கடேஷ் அவர்களை.

மிகமிகச் சாதாரண குடும்பத்தை சார்ந்தவர். 48 வயதாகும் இவர்மூலமாக இதுவரை சட்டபூர்வமாக மீட்கப்பட்டு, காப்பாற்றப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1800க்கும் மேல். சென்னை மாநகர காவலின் Help Line மற்றும் பல்வேறு சமூக சேவை அமைப்புகளின் உதவியால் இச்சாதனையை செய்துள்ளார்.

விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் தனது மகன் 'நீச்சல்' வீரராகவும், சமூக சேவையின் மீதுள்ள திருப்தியால் தனது மகள் 'சமூக சேவகி' யாகவும் உருவாகி வருவதில் எல்லையற்ற ஆனந்தம்.

இதுவரை 25 முறைக்கு மேல் ரத்ததானம் செய்தும், தன் மனைவியின் சம்மதத்துடன் நால்வரும் கண்தானம் செய்ய பதிவு செய்துள்ளார். 2004-ம் ஆண்டே தனது உடலை தான் இறந்த பிறகு தானமாக வழங்க சட்டபூர்வமாக தன குடும்பத்தார் சம்மதத்துடன் பதிவு செய்துள்ளார்.

காலஞ்சென்ற தன தாயாரின் கண்களை தானம் செய்து, புதிதாய் இருவருக்கு வெளிச்சம் கிடைக்க உதவி இருக்கிறார். தன வாழ்நாளின் லட்சியமாக தன் தாயின் நினைவாக இலவசமாக 'முதியோர் இல்லம்' ஒன்று அமைப்பதை குறிகோளாக கொண்டுள்ளார்.

எவ்விதமான கைமாறும் எதிர்பாராமல் செய்யும் இவரது சேவைக்கு சிரம் தாழ்ந்த நல்வாழ்த்துக்கள்!

உண்மையான இவரது சேவை தொடரட்டும்!
பல்லாண்டு வாழ்க - நீ
பார் போற்றும் மாமனிதனாக!


______

கடந்த 2009-ல் திரு S.M. வெங்கடேஷ் பற்றி ஒரு பதிவுலக நண்பர் தனது 'பார்வைகள்' வலைப்பூவில் எழுதிய கட்டுரை, 'S.M. வெங்கடேஷ் - மிஸ்டர் மனித நேயம்' இங்கு மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Raju Rescue

Dear Sir/Mam and Bro/Sis,Vanakkam, Today On 21.12.2021,Our Agal Foundation team rescued one male person from R10 MGR Nagar police limit near...